Tamil கட்டுரை | "காடுகளைப் பாதுகாப்போம் கட்டுரை" | Pothu Katturai for Primary Class

 காடுகளைப் பாதுகாப்போம்


முன்னுரை:

"காடுகளே நாட்டின் அரண்' என்பர் சான்றோர். அதனால்தான் காடுகளைப் பாதுகாக்க அரசும் மக்களுடன் இணைந்து பாடுபட்டு வருகிறது. பல வழிகளில் உலக உயிர்களை வாழவைக்கும் காடுகளின் பாதுகாப்பைக் குறித்து நாம் அறிய வேண்டியது அவசியமாகும்.

பொருளுரை:

பசுமைப்பொன்:

காடுகளைப் பசுமைப்பொன் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகும். காடுகளின் இன்றியமையாமை கருதி நமது அரசு. வனத்துறைப் பாதுகாப்புக் ஓர் அமைச்சகத்தை நிறுவியுள்ளது.

நமது கடமை:

விறகிற்காகவும் மரப்பொருள்கள் உருவாக்கவும் நாம் அழித்த காடுகள் ஒன்று இரண்டல்ல. காடுகள் அழிந்து போகுமாயின், அது நாட்டைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கு மட்டுமன்று, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

காடுகளின் முக்கியத்துவம்:

காடுகளே மழைக்கு முக்கியக் காரணியாக அமைகின்றன. அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், மேகங்களைக் குளிர்வித்து மழையைத் தருகின்றன. காலத்தே மழை பெய்யாவிட்டால் நாட்டில் வறட்சி, பஞ்சம், குடிநீர்ப் பற்றாக்குறை போன்ற பல கேடுகள் விளையும்.

காடுகளைப் பாதுகாக்காவிடில் ஏற்படும் விளைவுகள்: 

காடுகளிலுள்ள மரங்களின் வேர்கள். மண்ணில் ஊடுருவி இருப்பதாலேயே மண்ணின் கெட்டித்தன்மை மாறாது இருக்கிறது. மரங்கள் இல்லை என்றால் மண் இளகி ஆங்காங்கே நிலச்சரிவு,மண்ணரிப்பு. புதை மணல் போன்றவிளைவுகள் ஏற்படக்கூடும். காடுகளே மூலிகைகளின் கருவூலங்கள் ஆகும். சித்தமருத்துவத்தில் பயன்படுத்தும் எண்ணற்ற மூலிகைகளைத் தருபவை காடுகளே என்பதை நாம் மறந்து விடக்கூடாது. காடுகள் அழிவதால் எண்ணற்ற தொடர்விளைவுகள் ஏற்படும். அரிதான பறவை, விலங்கினங்கள் அழிந்துவிடும்.

பாதுகாக்கும் வழிகள்:

நாட்டுக்கு அரண் போன்று விளங்கும் காடுகளைப் பாதுகாப்பது நமது கடமையாகும். மரங்களை வெட்டாமல் தடுப்பதும் மீறுபவர்களுக்குத் தண்டனைகளை அதிகப்படுத்துவதும் அவசியமாகும். மர விதைகளை வான்வழியே தூவி, புதிய காடுகளை உருவாக்கலாம். 

முடிவுரை:

உலகையே பாதுகாக்கும் காடுகளை அழிக்காமல் பாதுகாப்பது அவசியம். ஒரு மரத்தை வெட்டினால் இரு மரங்களை நடவேண்டும் என்பதை மனதில்கொண்டு, மரங்களை வளர்த்து நமது வருங்காலத் தலைமுறையினரை நலமுடன் வாழவைப்போம். நல்ல காற்றையும் மழையையும் உணவையும் தந்து எல்லா உயிர்களையும் வாழவைக்கும் காடுகளைப் பாதுகாப்போம்!

"காட்டு வளத்தைப் பெருக்கினால் அது

நாட்டு வளத்தைக் கூட்டுமே!"


#கட்டுரை

#காடுகளைப்பாதுகாப்போம் 

#pothu_katturai

#tamil_katturaiகாடுகளைப்பாதுகாப்போம் 

#tamil_essayகாடுகளைப்பாதுகாப்போம் 

#கட்டுரை_சுலபமாக_எழுத_Easy_Tips

#essaywriting 

#favourite

#essay 

#காடுகளைப்பாதுகாப்போம் essayforkids

#kidsதமிழ்essay

#கட்டுரை

#சிலவரிகள்கட்டுரை

#குழந்தைகளுக்கான_கட்டுரை

#tamil

காடுகளைப் பாதுகாப்போம் tamil katturai , tamil essay , katturai , காடுகளைப் பாதுகாப்போம் கட்டுரை , essay in tamil , tamil essay writing tips , காடுகளைப் பாதுகாப்போம், முன்னுரை எழுதுவது எப்படி , முடிவுரை எழுதுவது எப்படி , pothu katturai , pothu katturai in tamil , pothu katturaigal tamil , podhu katturai , pothu katturai tamil , காடுகளைப் பாதுகாப்போம் ,TENTH,TAMIL,10TH,POTHU KATTURAI,ESSAY,COMMON,காடுகளைப் பாதுகாப்போம்,தமிழ்,பொதுக்கட்டுரை,பத்தாம் வகுப்பு,காடுகளைப் பாதுகாப்போம்,



Comments

Post a Comment